என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கீரை சாதம்
நீங்கள் தேடியது "கீரை சாதம்"
கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி எளிமையாக செய்யக்கூடியது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பசலைக் கீரை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
அரிசி - 1 1/2 கப்
பருப்பு - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.
இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.
பசலைக் கீரை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
அரிசி - 1 1/2 கப்
பருப்பு - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை :
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.
இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.
இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பசலைக் கீரை கிச்சடி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்தான மதிய உணவு முருங்கைக்கீரை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
முருங்கை கீரை - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 டீஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
பச்சரிசி - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கொப்பரை தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 3 பல்,
காய்ந்த மிளகாய் - 1,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேருங்கள்.
கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.
சூப்பரான முருங்கைக்கீரை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
முருங்கை கீரை - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 டீஸ்பூன்.
வறுத்து பொடிக்க:
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
பச்சரிசி - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
கொப்பரை தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 3 பல்,
காய்ந்த மிளகாய் - 1,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேருங்கள்.
கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.
சூப்பரான முருங்கைக்கீரை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாதநோயை குறைக்கும் தன்மை கொண்டது முடக்கத்தான் கீரை. இன்று இந்த கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கப்,
அரிசி - 1 கப்,
ஆய்ந்த கீரை - 1 கைப்பிடி
நெய், எண்ணெய் - 1 தேக்கரண்டி.,
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயம் - சிறிது,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி.,
சாம்பார்த்தூள் - ருசிக்கேற்ப,
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2,
பிரிஞ்சி இலை - 1,
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க :
தேங்காய் - 1 கப்
சீரகம் - அரை தேக்கரண்டி.,
ப.மிளகாய் - காரத்திற்கேற்ப,
செய்முறை
அரிசி, பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊரவைக்கவும்
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கீரையை சேர்த்து வதக்கவும்.
கீரை வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொதி வரும் போது அரிசி, பருப்பு, ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை மிதமாக எரியவைத்து 5 நிமிடம் அல்லது தேவைக்கேற்ப வேகவிடவும்.
குக்கர் திறந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதூவி, நெய் சேர்த்து தயிர்சட்னி அப்பளத்துடன் பரிமாறலாம்.
சூப்பரான முடக்கத்தான் கீரை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
துவரம் பருப்பு - 1 கப்,
அரிசி - 1 கப்,
ஆய்ந்த கீரை - 1 கைப்பிடி
நெய், எண்ணெய் - 1 தேக்கரண்டி.,
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயம் - சிறிது,
வெங்காயம் - 1,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி.,
சாம்பார்த்தூள் - ருசிக்கேற்ப,
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2,
பிரிஞ்சி இலை - 1,
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க :
தேங்காய் - 1 கப்
சீரகம் - அரை தேக்கரண்டி.,
ப.மிளகாய் - காரத்திற்கேற்ப,
செய்முறை
அரிசி, பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊரவைக்கவும்
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் கீரையை சேர்த்து வதக்கவும்.
கீரை வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொதி வரும் போது அரிசி, பருப்பு, ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை மிதமாக எரியவைத்து 5 நிமிடம் அல்லது தேவைக்கேற்ப வேகவிடவும்.
குக்கர் திறந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதூவி, நெய் சேர்த்து தயிர்சட்னி அப்பளத்துடன் பரிமாறலாம்.
சூப்பரான முடக்கத்தான் கீரை சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X